ஜனாதிபதி அனுரவின் Clean Sri Lanka திட்டம் : புதுபொலிவு பெற்ற முல்லைத்தீவு கடற்கரை!!

616

ஜனாதிபதி அனுரவின் Clean Sri Lanka திட்டத்தால் முல்லைத்தீவு கடற்கரை புதுப்பொலிவு பெற்று பார்ப்பதற்கு மிகவும் ரம்மியத்துடன் காணப்படுகின்றது.

இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க , பதவியேற்றது முதல் பலவேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.

அமைத்து மக்களும் இலங்கை நாட்டின் குடிகள் என இன மத பேதம் பாராது மக்களுக்கு நன்மைகளை வாரி வழங்கும் பல்வேறு திட்டங்களை ஜனாதிபதி அனுரகுமார அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

வழமையாக ஆட்சிக்கு வருவோர் வடக்கு , கிழக்கில் அபிவிருத்திகளை முன்னெடுக்க உள்ளதாக கூறினாலும் அது செயலில் காட்டுவது மிக குறைவே.

ஆனால் தற்போதைய ஜனாதிபதி அனுர குமார, வடக்கு, கிழக்கு மக்களுக்கு மட்டுமல்லாது மலைய மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருவதுடன், ஆடம்பரமில்லாது நேரடியாக சென்று மக்களை சந்திக்கின்றார்.

இறுதிபோரில் உருக்குலைத்த முல்லைத்தீவு தற்போது ஜனாதிபதி அனுரவின் Clean Sri Lanka திட்டத்தால் கடற்கரை மிகவும் அழகாக மாறியுள்ளது. மக்களும் மகிழ்ச்சியுடன் முல்லைத்தீவு கடற்கரைக்கு சென்று தமது பொழுகளை போக்கி வருகின்றனர்.