நெடுந்தீவில் 503 காட்டுக் குதிரைகள் : வனஜீவராசிகள் திணைக்களம்!!

394

யாழ்ப்பாண மாவட்டத்தின் நெடுந்தீவில் சுமார் 503 காட்டுக் குதிரைகள் இருப்பதாக வனஜீவராசிகள் திணைக்களம் மேற்கொண்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் பல்கலைக்கழகத்தினர் இணைந்து அண்மையில் இந்தக் கணக்கெடுப்பை நடத்தியதாக திணைக்களத்தின் பணிப்பாளர் எச்.டி. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கணக்கெடுப்பின் போது இந்த குதிரைகள் பரந்து வாழும் பிரதேசங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவற்றை பாதுகாக்க தனியான பிரதேசம் ஒன்று ஒதுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காட்டுக் குதிரைகளுக்கு தண்ணீர் தேவை என்பதால், சிறிய நீர்த் தேக்கம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்காக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினரின் உதவியும் பெறப்பட்டுள்ளது எனவும் ரத்நாயக்க மேலும் கூறியுள்ளார்.

N1 N2 N3 N4