வடக்கு மாகாணத்தில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் : வெளியான எச்சரிக்கை!!

964

வங்காள விரிகுடாவில் நேற்றையதினம்(20.10.2025) உருவான தாழமுக்கம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இந்த தாழமுக்கம் இன்று மாலை அல்லது நாளை அதிகாலை வடக்கு மாகாணத்திற்கு மிக அருகாக நிலைகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் கனமழை எதிர்வரும் 23.10.2025 வரை தொடரும் வாய்ப்புள்ளது. எனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் இது தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.