
தென் கொரியாவின் ஓசான் நகரில், 20 வயதுடைய ஒரு பெண் கரப்பான் பூச்சியை கொல்ல முயற்சித்ததில், தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது.
கீழ்தள வணிக வளாகங்கள் மற்றும் மேல்தளங்களில் 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கொண்ட இந்த அடுக்குமாடியில், அந்த பெண் தற்காலிக ஃபிளேம்த்ரோவை பயன்படுத்தி பூச்சியை கொல்ல முயன்ற போது தீ விரைவாக பரவி குடியிருப்பை ஆழமாக பாதித்தது.
இந்த தீ விபத்தில், அந்தக் குடியிருப்பில் வசித்து வந்த 30 வயது சீனப் பெண் ஒருவர் தீ மற்றும் அதிக புகை காரணமாக சிக்கி, மருத்துவமனையில் அனுப்பப்பட்டாலும் உயிரிழந்தார்.

குறைந்தபட்சம் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தீ விபத்திற்கும் அலட்சியத்திற்கும் பொறுப்பாக அந்த இளம் பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில், வீடுகளில் பயன்படுத்தப்படும் தீவிர கரப்பான் பூச்சி கொல்லும் முறைகள் அதிகமாக பிரபலமாகி வருகின்றன.
இதேபோல் முன்னொரு சில சம்பவங்களிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில், 2023ஆம் ஆண்டு ஜப்பானில் அதேபோல் முயற்சிகள் தீ விபத்திற்கான காரணமாக இருந்ததாக பதிவாகியுள்ளது.





