வாழ பிடிக்கவில்லை : கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்!!

567

இந்த உலகத்துல எனக்கு வாழவே பிடிக்கல” என்று உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வேப்பங்குளம் காலனி தெருவில் வசித்து வருபவர் அருள்ராஜ். இவர் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் காவ்யா(18) என 2 மகள்கள் இருந்தனர்.

இதில் காவ்யா, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

உடனடியாக அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இது தகவல் அறிந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை விசாரணை நடத்தினர்.

தற்கொலை குறித்து மாணவி எழுதிய கடிதத்தில், “எனக்கு இந்த உலகில் வாழ பிடிக்கவில்லை. என்னை மன்னித்து விடுங்கள் அப்பா, என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை” என உருக்கமாக கடிதம் எழுதி வைத்துள்ளார்.