கோர விபத்தில் ஒருவர் பலி : கார் சாரதி கைது!!

647

கம்பஹாவில் உடுகம்பொல – கொட்டுகொட வீதியில் கெஹெல்பத்தர சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (31.10.2025) காலை 06 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியில் இருந்த பாதசாரி மோதி பின்னர் அருகிலிருந்த கடை மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெஹெல்பத்தர பகுதியைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து காரின் சாரதியான இளைஞன் ஒருவன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விபத்தின் போது காரில் இருந்த சாரதியின் தாயும் சாகோதரியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் கம்பஹா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.