அனுராதபுரத்தைச் சேர்ந்த இரட்டை மாணவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம்!!

347

அனுராதபுரத்தில் உள்ள கட்டுகெலியாவ வித்யாதீப மகா வித்யாலயாவின் இரட்டை மாணவர்களான சசிரு நிம்னல் மற்றும் ராமிரு நிம்நாத் ஆகியோர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கும் ரோபோவை உருவாக்கியதற்காக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேனவின் தலைமையில், அமைச்சகத்தில் இது தொடர்பான பாராட்டு விழா நடைபெற்றது.

நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம், கண்டுபிடிப்பாளர்கள் ஆணையகம் மற்றும் தேசிய கண்டுபிடிப்பு நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் பங்கேற்று, மாணவர்களின் AI அடிப்படையிலான ரோபோவின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு தொழில்நுட்ப வழிகாட்டுதல் மற்றும் நிறுவன ஆதரவை உறுதியளித்தனர்.

அத்துடன் அமைச்சின் செயலாளர் முகமது நவவி, அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.