காதலன் திருமணத்திற்கு மறுத்ததால் மாணவி எடுத்த விபரீத முடிவு!!

534

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே காதலன் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால், 19 வயது நர்சிங் பயிற்சி பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சுமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வத்தின் மகள் ஹரிதா, திருத்தணியில் உள்ள தனியார் நர்சிங் டிப்ளமா பயிற்சி பள்ளியில் படித்து வந்தார்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திலீப் என்பவருடன் அவர் ஒன்றரை வருடமாக காதலில் இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஒரு மாதமாக தன்னை திருமணம் செய்யுமாறு ஹரிதா கேட்டபோது, திலீப் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஹரிதா, வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவர் எழுதிய கடிதத்தில் “என் மரணத்திற்கு திலீப் தான் காரணம்” என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, ஹரிதாவின் பெற்றோர் கனகம்மாசத்திரம் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனை முடிந்தும், உறவினர்கள் உடலை பெற மறுத்து,

“திலீப்பை கைது செய்தால் தான் உடலை வாங்குவோம்” என மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தினர். பின்னர் டி.எஸ்.பி கந்தன் தலைமையில் போலீசார் சமரசம் பேசினர்