அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முயலும் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு எச்சரிக்கை!!

387

Aus

தமிழக முகாம்களில் இருந்து போலி முகவர்கள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறையினர் முகாம்களுக்கு சென்று எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களில் இலங்கை தமிழர்கள் படகின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு கடவுச் சீட்டு மற்றும் விசா இன்றி தப்பிச் செல்ல அதிகமானவர்கள் முயற்சிப்பதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளமையால் இந்த எச்சரிக்கை விடப்படுள்ளது.

இதற்காக பொய் பேசி போலி முகவர்கள் இடைத் தரகர்களை அகதிமுகாமுக்குள் வசிப்பவர்களிடம் அதிகளவிலான பணம் அறவிட்டு அவர்களை ஏமாற்றி வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தமிழர்கள் பொய்யான தகவல்களை நம்பி வாழ்க்கயை தொலைத்து விட வேண்டாம் என தெரிவித்துள்ளது. இவர்கள் தொடர்பான உண்மையான தகவல்களை தருபவர்களுக்கு தகுந்த சன்மானமும் வழங்கப்படும் என தமிழக பொலிசார் தெரிவித்துள்ளனர்.