பாலியல் துஸ்பிரயோகம் செய்து கொலை செய்த வைத்தியருக்கு மரண தண்டனை!!

458

court

2007 ஆம் ஆண்டு யுவதி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்து பின்னர் 6ஆவது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த வைத்திய கலாநிதி ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு மேல்நீதிமன்றம் இந்த தண்டனையை இன்று விதித்தது.

இந்திக சுதர்சன என்ற இந்த வைத்தியர் தம்மிடம் சிகிச்சை பெற வந்த யுவதியையே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி அவரை 6 ஆவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.

குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் மரதன்கடவல என்ற இடத்தை சேர்ந்த இந்த வைத்தியர் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த சமிலா திஸாநாயக்க என்பவரையே கொலை செய்தார்.

பாலியல் துஸ்பிரயோகத்துக்கு பின்னர் குறித்த யுவதி தற்கொலை செய்துகொண்டதாக காட்டுவதற்காகவே வைத்தியர் அவரை மாடியில் இருந்து தள்ளிவிட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.