தொடர் இருமல்.. இந்திய மாணவி அமெரிக்காவில் மர்ம மரணம்!!

416

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏ அண்டு எம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ராஜலட்சுமி யார்லகட்டா (23) என்ற ராஜி, சமீபத்தில் பட்டம் பெற்று வேலை தேடி வந்தார்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அவர், இருமல் மற்றும் நெஞ்சுவலி காரணமாக சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் வசித்த குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அலாரம் அடித்தும் எழவில்லை என நண்பர்கள் கூறியுள்ளனர். தூக்கத்திலேயே உயிரிழந்திருக்கலாம் என ஆரம்ப தகவல்கள் கூறினாலும், உண்மையான காரணம் பிரேத பரிசோதனைக்கு பின்பே தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ராஜலட்சுமியின் மரணம் குறித்து தெரிந்த அவரது குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்காக உறவினரான சைதன்யா நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

ஆந்திராவின் பபட்லா மாவட்டம், கார்மிசெடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தின் ஒரே நம்பிக்கையாக இருந்த இளம் மகளின் இழப்பு, குடும்பத்தினரை உலுக்கி விட்டுள்ளது.