தலை முதுகுப்புறமாக தலைகீழாக தோற்றமளிக்கும் நிலையில் பிறந்த நபரொருவர் வாழும் அதிசயம் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.
மொன்ட் சன்தோ பிராந்தியத்தைச் சேர்ந்த கிளோடியோ வியயிரா டி ஒலிவெயிரா (37) என்ற நபரே இவ்வாறு விநோத பாதிப்புடன் வாழ்ந்து வருகிறார்.
அவர் பிறந்த போது அவர் தொடர்ந்து உயிர்பிழைத்திருப்பது சாத்தியமற்றது என தெரிவித்த மருத்துவர்கள், அவரை பட்டினியால் வாடவிட்டு மரணமடைய விடுமாறு அவரது தாயாருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.ஆனால் அவரது தாயாரோ அதற்கு மறுத்துள்ளார்.
அவயவங்கள் மோசமாக விகாரமடைந்து தலை கீழான நிலையில் இருக்க பிறந்த போதும், கிளோடியோ மருத்துவர்களின் ஊகத்தை பொய்யாக்கும் வகையில் கணக்கியலாளராகவும் சர்வதேச ஊக்கமளிக்கும் பேச்சாளராகவும் மாறினார்.
இது தொடர்பில் கிளோடியோ கூறுகையில், ”நான் சிறுவனாக இருந்தது முதற் கொண்டு எப்போதும் வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். நான் மற்றவர்களிடம் முழுமையாக தங்கியிருப்பதை விரும்பவில்லை. தற்போது கணக்காளராகவுள்ள நான் வாடிக்கையாளர்களுக்கான ஆய்வை மேற்கொண்டு வருவதுடன் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறேன் ” என்று கூறினார்.
தொலைக்காட்சியை இயக்குதல், கையடக்கத்தொலைபேசியை எடுத்தல், வானொலி பெட்டியை இயக்குதல், எனது கணினியில் இணையத்தளங்களை பயன்படுத்தல் உள்ளடங்கலான அனைத்து கருமங்களையும் நானே செய்கிறேன்.” என அவர் தெரிவித்தார்.
கிளோடியோ தனது வாயில் பேனையொன்றை வைத்து எழுத்துகளை அச்சிடுகிறார். அத்துடன் கையடக்கத் தொலை பேசிகளையும் கணினியையும் தனது உதடுகள் மூலம் செயற்படுத்துகிறார்.
அவர் பியரா டி சான்தானா பல்கலைக் கழகத்தில் கணக்கியல் துறையில் பட்டப் படிப்பை பூர்த்திசெய்துள்ளார்.