
மராட்டிய மாநிலம் மும்பையில் முன்னாள் காதலனின் தொல்லையால் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை கட்கொபர் பகுதியை சேர்ந்த கிர்திகா (22) என்ற இளம்பெண், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
அதே நிறுவனத்தில் பணியாற்றிய அலி ஷேக் என்ற இளைஞருடன் கிர்திகா காதலில் இருந்தார். சில மாதங்களுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர் அந்த உறவை முறித்ததாக கூறப்படுகிறது
ஆனால் அலி ஷேக் தன்னை மீண்டும் காதலிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தியதுடன், தொலைபேசி வழியாகவும் நேரிலும் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கிர்திகா, கடந்த சனிக்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், “என் மரணத்திற்கு அலி ஷேக் தான் காரணம்” என குறிப்பிட்டிருந்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
கிர்திகாவை தற்கொலைக்கு தூண்டியதாக அலி ஷேக்கை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் மும்பை நகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





