நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து : 42 பேர் பலி : மீட்புப் பணிகள் தீவிரம்!!

580

ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 42 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர்,

பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பிக்க ஐரோப்பிய நாடுகளுக்குள் கடல் வழியாக சட்டவிரோதமாக நுழையும் ஆபத்தான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் போது பல்வேறு கடல் விபத்துகள் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த 49 பேர் கொண்ட குழு, கடந்த 3ம் தேதி லிபியாவின் சொவரா துறைமுகம் அருகே இருந்து மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவை நோக்கி புறப்பட்டதாக கூறப்படுகிறது. பயணத்தின் போது கடுமையான கடல் அலைகள் காரணமாக படகு திடீரென கவிழ்ந்தது.

திடீர் விபத்தில் படகில் இருந்த அனைவரும் கடலில் மூழ்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த லிபியா கடற்படையினர் உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அவர்களால் 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால் 42 பேரின் உடல்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டன.

மீதமுள்ளவர்களைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடல் வழி சட்டவிரோத குடியேற்றம் தடுக்க ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் லிபியா அரசு சேர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தாலும், இந்த வகை அபாயகரமான முயற்சிகள் தொடர்ந்து கொண்டே உள்ளன.