வெளிநாட்டில் கழுத்தறுத்து கொல்லப்பட்ட இலங்கையர் : சடலம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

265

இஸ்ரேலில் கழுத்து துண்டிக்கப்பட்டதாக கூறப்படும் இரண்டு பிள்ளைகளின் தந்தையின் உடல் ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

அம்பலங்கொடை, காலி, படபோலாவைச் சேர்ந்த 38 வயதான தரிந்து ஷனகா, கட்டுமானத் துறையில் தச்சராக வேலை செய்ய கடந்த செப்டெம்பரில் இஸ்ரேலுக்கு சென்ற நிலையில் கழுத்து துண்டிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அவரது உடலை நாட்டிற்கு கொண்டுவர உதவுமாறு மனைவி கோரிக்கை விடுத்திருந்த நிலையில்,அவரது உடல் ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டார நேற்று (16.11.2025) தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் இலங்கையர்கள் சாலை விபத்துகள் மற்றும் உடல்நலக் காரணங்களால் இறந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை.

இரண்டு இலங்கையர்களுடன் இருந்தபோது ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஒரு கருப்பினத்தவருடன் உடலுறவு கொண்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு பிறகு அவர் இந்த கொலையை செய்ததாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேலிய பொலிஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படும் வரை குறிப்பிட்ட காரணத்தை அறிவிக்க முடியாது என்றும் நிமல் பண்டார கூறியுள்ளார்.

நேற்றைய நிலவரப்படி உடல் தடயவியல் மருத்துவ நிறுவனத்தில் இருப்பதாகவும்,உடலை இந்த நாட்டிற்குக் கொண்டுவர சுமார் 1.5 மில்லியன் ரூபாய் செலவாகும் என்றும், தூதரகம் அந்த பணத்தைச் செலவழித்து உடலை கொண்டுவர தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் தூதர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் வேலையில் ஈடுபடும்போது விபத்து ஏற்பட்டால், இழப்பீடு வழங்கப்படும் என்றும், தற்போது ஒரு சிலருக்கு அத்தகைய இழப்பீடு (மாதாந்திர சம்பளம்) வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தற்போது சுமார் 26,000 இலங்கையர்கள் இஸ்ரேலில் இருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 1,000 பேர் வரவிருப்பதாகவும் தூதர் மேலும் தெரிவித்துள்ளார்.