வவுனியாவில் முதன்முறையான வாகனங்களை அதிவேகமாக சார்ஜ் செய்யும் வசதி!!

325

வவுனியா மாவட்டத்தில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் அவற்றுக்குத் தேவையான அதிவேக சார்ஜ் சேவைகளைப் பெற்றுக்கொடுக்கும் முகமாக PRO AUTO PARK நிறுவனம் அதிவேக சார்ச் செய்யும் இயந்திரத்தினை நிறுவியுள்ளது.

படிப்படியாக மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற அதேவேளை அவற்றுக்கான சார்ஜ் நிலையங்கள் இன்மையினால் வவுனியா மாவட்ட மக்கள் மற்றும் ஏனைய பிரதேசங்களிலிருந்து வவுனியா மாவட்டத்திற்கு வருகை தருபவர்களும் வவுனியா ஊடாக வேறு மாவட்டங்களுக்கு பயணிப்பவர்களுக்கும் வாகனத்தினை அதிவேகமாக சார்ஜ் செய்யும் கேள்வியும் அதிகரித்துள்ளது.

இதனால் வவுனியா மாவட்டத்தில் வரவேற்பு இடத்தினை அண்மித்த பகுதியான ஏ9 வீதி, மூன்று முறிப்பு பகுதியில் ( வன்னி இரானுவ முகாம் முன்பாக) அமைத்துள்ள PRO AUTO PARK தமது நிறுவனத்திற்கு முன்பாக அதிவேகமாக வாகனத்திற்கு சார்ஜ் மேற்கொள்ளும் வசதியினை கொண்ட தன்னியக்க இயந்திரத்தினை நிறுவியுள்ளனர்.

வீடுகளில் சார்ஜ் செய்யும் சமயத்தில் அதிகளவில் நேரம் விரயமாகுவதுடன் மின்சார கட்டணமும் அதிகளவில் செலவாகும். இவ்வியந்திரம் மூலம் வாகனத்திற்கு சார்ஜ் செய்யும் போது நேரமும் , பணமும் சேமிக்கப்படும் என்பதுடன் வாகன பேற்றரியின் ஆயுள் காலமும் நிடித்து நிலைக்கும்

60KW சார்ஜ் தன்மையினை கொண்ட இவ் இயந்திரம் மூலம் 20 தொடக்கம் 30 நிமிடங்களுக்குள் வாகனத்தினை முழுமையாக சார்ஜ் செய்து கொள்ள முடியும் . மேலதிக விபரங்களுக்கு 0777123450 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்ளவும்.

-இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்-