வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற பாரதி முன்பள்ளியின் கலைவிழா 2025!!

145

வவுனியா பாரதி முன்பள்ளியின் கலை விழாவானது பாடசாலையின் அதிபர் ஜெயராஜா சந்திரா தலைமையில் வவுனியா மாநகர கலாசார மண்டபத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

மங்கவிளக்கேற்றலுடன் விழா ஆரம்பமானதுடன் வரவேற்புரை, தலைமையுரை, அதிதிகள் உரையுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றிருந்தன

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மாத்தறை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் விஜயரகுநாதன் ஸ்ரீவிசாகன்,

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் அருட்சகோதரி ஜெனிற்றா சியாமினி செபஸ்ரியாம்பிள்ளை, வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபர் நந்தசேனா சத்தியதேவி, வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆரம்பபிரிவு உப அதிபர் புஸ்பகுமார் மாலதி,

கௌரவ விருந்தினர்களாக வைரவப்புளியங்குளம் கிராம சேவையாளர் ஜெகதீபன் நிரஷஞ்சனா, மாவட்ட செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் சிவராஜா பிரிந்திகா, பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் இராசலிங்கம் இளம்சிங்கம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமையுடன் முன்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் , நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.