
நவல்பூர் காரை கூட்ரோடு பகுதியில் அமைந்த புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில் வேகமாக வந்த கார் பைக் மீது நேருக்கு நேர் மோதியது. கர்நாடக மணிலா பதிவெண் கொண்ட கார் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்தது.
இந்த விபத்தில் பைக்கில் சென்ற தினேஷ் (20), சாஜன் (26), பாலமுருகன் (19) மூவரும் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூவரையும் வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ராணிப்பேட்டை போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





