
இலங்கையில் சுமார் 160 ஆண்டுகளாக அழிந்து விட்டதாகக் கருதப்பட்ட தவளை இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த இனம் சிவனொளிபாதமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
அதற்கு ஸ்டெல்லாவின் நட்சத்திர தவளை என பெயரிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் கூறினார்.





