விசா நிராகரிப்பால் உயிரைவிட்ட இந்திய மருத்துவர் : சிதைந்த அமெரிக்க கனவு!!

5

இந்திய மாநிலம் ஆந்திராவைச் சேர்ந்த பெண் மருத்துவர், அமெரிக்க விசா நிராகரிப்பால் உயிரை மாய்த்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த மருத்துவர் ரோகிணி. 38 வயதான இவர் அமெரிக்காவில் பணியாற்ற விரும்பியுள்ளார். இதற்காக அவர் பணி விசா விண்ணப்பித்து காத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவரது விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மனமுடைந்த ரோகிணி தனது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக கடிதம் எழுதி வைத்திருத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.