நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 10 பேர் மரணம்!!

13

கடந்த சில தினங்களாக நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில் 10 பேர் வரை உயர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பதுளை, ஹம்பாந்தோட்டை மற்றும் கேகாலை மாவட்டங்களில் மரணங்கள் பதிவாகியுள்ளதாக நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட 67 பேர் 03 பாதுகாப்பான மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சீரற்ற வானிலையால் களுத்துறை, காலி, யாழ்ப்பாணம், பதுளை, கேகாலை, இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாகும்.