விபத்தில் கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் உயிரிழப்பு!!

219

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் நடந்த விபத்தில் ஓட்டமாவடியைச் சேர்ந்த மருத்துவபீட மாணவரொருவர் திங்கட்கிழமை (24) மாலை உயிரிழந்துள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்துக்குச் சென்று திரும்பி வரும் வழியில் குறித்த மாணவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீட நான்காம் வருட மாணவரான 23 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.