வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய தகவல்!!

4

வாகன இறக்குமதிகள் எதிர்பார்த்ததை விட அதிகளவில் உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில், 2026 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிகள் சாதாரண நிலைக்கு திரும்பும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த வருட இறுதியில் 582 மில்லியன் அமெரிக்க டொலருக்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 250,000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.