பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கும் திகதியில் திடீர் மாற்றம் : வெளியான அறிவிப்பு!!

798

2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 8 ஆம் திகதி தொடங்கப்படாது என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா இதனை தெரிவித்துள்ளார்.

நிலவும் மோசமான வானிலை காரணமாக, இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சை பாடங்கள் டிசம்பர் 7, 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக டிசம்பர் 10 ஆம் திகதி பாடசாலையைதொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.