
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத விமானங்களை திருப்பியனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் கடுமையான வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, விமானங்களை திருவனந்தபுரம் மற்றும் கொச்சினுக்கு திருப்பி விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.





