வெள்ளத்தில் மூழ்கிய வீடு : மாடியில் சிக்கிக்கொண்ட குடும்பம் மீட்பு!!

118

தெதுறு ஓயா பெருக்கெடுத்தமையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளனர். விமானப் படையின் ஹெலிக்கொப்டர் மூலம் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

மஹவ எல்ல பிரதேசத்தில் தங்களது வீடு வெள்ளத்தால் சூழப்பட்டமையினால் இரண்டு மாடி வீடு ஒன்றின் மேல் தளத்தில் சிக்கியிருந்த அவர்கள் மூவரும்,

இலங்கை விமானப் படையைச் சேர்ந்த பெல்-212 ரக ஹெலிக்கொப்டர் மூலம் மீட்கப்பட்டனர் என விமானப்படை தெரிவித்துள்ளது.