
மஹவ – நாகொல்லாகம வீதியில் விஹேனேகம சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (02.12.2025) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதிக வேகத்தில் பயணித்த வேன் ஒன்று, சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் வேனின் சாரதியும், சைக்கிளில் பயணித்த இருவரும் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சைக்கிளில் பயணித்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.





