
காலி – பியதிகம பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையில் கார் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (09.12.2025) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காலியிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே இந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காரின் சாரதி காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு நிவாரண பொருட்களை கொண்டு சென்ற கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.





