வீட்டு வாசலில் வைத்து வெட்டப்பட்ட அண்ணன் தங்கை : திருமணமாகி மூன்று மாதத்தில் நடத்த கொடூரம்!!

33

தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள முத்தையன் செட்டி பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் 27 வயதுடைய பிரதீப் இவர் சட்டம் பயின்றுள்ள நிலையில் சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் நிகிலா என்பவருடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

பின்னர் இருவரும் முத்தையன் செட்டி பட்டியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். பிரதீப் தந்தை அமமுக கட்சி பொறுப்பில் உள்ள நிலையில் பிரதீப் எந்த வேலைக்கும் செல்லாமல் குடித்துவிட்டு அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என்று ஊர் சுற்றி கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் பிரதீப் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக சொல்லப்படுகிறது இதன் காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்திருக்கிறது.

ஒரு கட்டத்திற்கு மேல் பிரதீப் செய்யும் அட்டகாசத்தை பொறுக்கமுடியாத நிகிலா கணவனை பிரிந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி கடந்த வாரம் நிகிலாவை மீண்டும் கணவருடன் சேர்த்து வைத்தனர்.

இந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன் இருவருக்கும் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டதில், பிரதீப் நிகிலாவை சரமாரியாக தாக்கினார் என சொல்லப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த அவர் சின்னமனூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில்,பிரதீப் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

பின்னர் இனிமேல் பிரதீப்புடன் வாழ முடியாது என முடிவு செய்த நிகிலா தனது அண்ணன் மற்றும் சில உறவினர்களுடன் சேர்ந்து பிரதீப் வீட்டில் இருந்த தனக்கு சொந்தமான பொருட்களை எடுக்க சென்றிருக்கின்றனர்.

அப்போது வீட்டு வாசலில் காத்திருந்த பிரதீப் மற்றும் அவரது தந்தை சிவகுமார் நிகிலாவிடம் வாக்குவாதம் செய்திருக்கின்றனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதை ஆத்திரமடைந்த பிரதீப் மாற்று அவரது தந்தை நிகிலாவின் அண்ணனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதனை பார்த்து நிகிலா மயங்கிய நிலையில் அவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். படுகாயமடைந்த நிகிலா மற்றும் அவரது அண்ணன் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

இதை அறிந்து தந்தையும் மகனும் அப்பகுதியில் இருந்து தப்பி சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி ஆதாரங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு பிரதீப் மற்றும் அவரது தந்தை சிவகுமார் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

குடும்பத் தகராறு காரணமாக இளைஞர் மனைவி மற்றும் மைத்துனரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.