இரண்டு பிள்ளைகளையும் மல்வத்து ஓயாவில் தள்ளிவிட்டு கொலைசெய்த தாய்க்கு விளக்கமறியல்!!

167

அநுராதபுரத்தில் டிசம்பர் 02ஆம் திகதி அதிகாலையில் தனது இரண்டு பிள்ளைகளையும் மல்வத்து ஓயாவில் தள்ளிவிட்டு கொலைசெய்த தாயாரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.

அநுராதபுரத்தில் 40 வயதுடைய தாய் ஒருவர், தனது 04 வயதுடைய மகள் மற்றும் 08 வயதுடைய மகனை மல்வத்து ஓயாவில் தள்ளிவிட்டுள்ளார்.

மல்வத்து ஓயாவில் தள்ளிவிடப்பட்ட இரண்டு பிள்ளைகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சில நாட்களின் பின்னர் அவர்களின் சடலங்கள் கரை ஒதுங்கியன.

குடும்பத் தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதனையடுத்து சந்தேக நபரான தாயார் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.