ஸ்ரீ ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்களின் தனிப்பட்ட நிதியிலிருந்து அவரின் ஆலோசனைக்கு அமைவாக கஷ்டப்பிரதேசங்களில் தூர இடங்களில் இருந்து பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களுக்கான பேருந்து செலவுகளை பொறுப்பேற்று அவர்களுக்கான பருவகால பயண அனுமதி சீட்டுக்களை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம்(05.09) நடைபெற்றது.
ஓமந்தை மத்திய கல்லூரி, மாதர் பணிக்கர் மகிழங்குளம் கனிஷ்ர உயர்தர வித்தியாலயம், பூந்தோட்ட மத்திய மகாவித்தியாலயாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்விகற்கும் 150 மாணவர்களுக்கான பயண சிட்டைகளை வழங்கும் நிகழ்வுகளில் உதயராசா கல்வி அறக்கட்டளையின் பணிப்பாளர் என்.ஜனகன், ஸ்ரீ ரெலோ கட்சியின் வவுனியா இணைப்பாளர் பில்லா மற்றும் பயன் பெற்ற பாடசாலைகளின் அதிபர்களும் கலந்துகொண்டு மாணவர்களுக்கான பருவ கால பயணச் சீட்டுக்களை வழங்கி வைத்தனர்.