மின் கம்பங்களை உடைத்துக்கொண்டு ஆற்றில் பாய்ந்த வான் : உயிர் தப்பிய யுவதிகள்!!

228

கந்தளாய் – சேருநுவர பிரதான வீதியில், கந்தளாய் அணைக்கட்டுக்கு முன்பாக வான் ஒன்று வீதியில் இருந்து விலகி ஆற்றில் பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இன்று (17.12.2025) காலை 8.00 மணியளவில் கந்தளாயில் இருந்து ஆடைத்தொழிற்சாலை யுவதிகளை வான்-எல பகுதிக்கு ஏற்றச்சென்ற வானே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

கந்தளாய் அணைக்கட்டுக்கு முன்பாக கட்டுப்பாட்டை இழந்து வீதியிலிருந்து விலகிய வான், வீதியோரத்திலிருந்த இரண்டு மின்கம்பங்களை பலமாக மோதி உடைத்துக்கொண்டு அருகில் இருந்த ஆற்றுக்குள் விழுந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது வானில் பயணித்த சாரதி உட்பட இரண்டு யுவதிகளுக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என கந்தளாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.