மன்னாரில் நீருக்குள் ஔித்து வைக்கப்பட்டிருந்த 18 கிலோ கேரள கஞ்சா பிடிபட்டது!!

675

Kanja

பேசாளை மற்றும் தலைமன்னார் வரையான கடற்பரப்பில் இருந்து நீருக்குள் ஔித்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இரண்டு கேன்களில் அடைக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

18 கிலோ 315 கிராம் கேரள கஞ்சா இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.