20 லட்சம் ரூபா பெறுமதியான கருத்தடை மாத்திரைகளை கைப்பற்றிய சுங்க அதிகாரிகள்!!

296

Tab

இந்தியாவின் சென்னை நகரில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட கருத்தடை மாத்திரைகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கட்டுநாயக்க சுங்க அதிகாரிகள் இன்று காலை மேற்கொண்ட தேடுதலில் இந்த மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்தடைக்கு பயன்படுத்தப்படும் இந்த மாத்திரைகள் விட்டமின் மாத்திரைகள் எனக் கூறி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

கொழும்பில் உள்ள சில மருந்தகங்களுக்கு இவை விநியோகிக்கப்படவிருந்தன. கைப்பற்றிய மாத்திரைகளின் பெறுமதி சுமார் 20 லட்சம் என சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.