மனைவிக்கு மயக்க மாத்திரை ஊட்டி கொலைசெய்ய முற்பட்ட கணவன் கைது!!

384

A6

மட்டு வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 40ம் கிராமத்தைச் சேர்ந்த கணவன் தனது மனைவிக்கு வற்புறுத்தி மயக்க மாத்திரைகளை ஊட்டி கொலை செய்யமுற்பட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவரை களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

40ம் கிராமத்தைச் சேந்த 24 வயதுடைய தங்கராசா- நிசாந்தன் என்பவர் கடந்த 2008ம் ஆண்டு தனது வேலையின் நிமித்தம் அரேபிய நாட்டிற்கு சென்று அண்மையில் நாடு திரும்பியிருந்தார்.

கடந்த சில காலமாக கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று குறித்த நபர் வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்த ஒரு வகையான மயக்க மாத்திரைகளை மனைவிக்கு வற்புறுத்தி ஊட்டி கொலை செய்ய முற்பட்டதாக அவரின் மனைவியான 21 வயதுடைய குவேந்தினி வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்திருந்ததாகவும் செல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையினை தொடர்ந்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டு களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது மனித கொலை செய்ய எத்தணித்தமை என்ற குற்றசாட்டின் பெயரில் விசாரணைகளுக்காக 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.