
யாழ்ப்பாணம் பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
எனினும் கரையொதுங்கிய உடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை யாழில் கரையொதுங்கிய உடலம் இந்தியா இராமேஸ்வரம் பகுதியிலிருந்து மீன்பிடிக்க சென்று கடந்த 6ஆம் திகதி நடுக்கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர் உடலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தமிழ்நாடு தகவல்கள் வெளியாகியுள்ளன.





