ஐதராபாத்தில் விபசார வழக்கில் சிக்கிய நடிகை ஸ்வேதா பாசுவிற்கு கதாநாயகி வாய்ப்பு தருவதாக பிரபல இந்திப்பட இயக்குனர் ஹன்சல் மேத்தா தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்வேதா பாசு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் விபசாரத்தில் ஈடுபட்டதாக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி ஐதராபாத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் அவரை 3 மாதங்கள் வரை தங்குவதற்காக அனுப்பியுள்ளனர்.
பின்னர் ஸ்வேதா இதுபற்றி விளக்கம் அளிக்கையில், பட வாய்ப்புகள் இல்லாததால் பண நெருக்கடிக்கு ஆளாகி விபசார தொழிலுக்கு தள்ளப்பட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பல்வேறு தரப்பினரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில் இந்திப்பட இயக்குனர் ஹன்சல் மேத்தா, ஸ்வேதா பாசுவுக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார்.
இதுபற்றி அந்த இயக்குனர் விடுத்துள்ள அறிக்கையில், மக்தே படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்வேதா பாசுவின் அற்புத நடிப்பு எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. எனவே எனது அடுத்த படத்தில் அவருக்கு கதாநாயகி வாய்ப்பு அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையறிந்த நடிகை ஸ்வேதா, தனது கடினமான நிலையைக் கண்டு இயக்குனர் ஒருவர் தனக்கு ஆதரவு அளிப்பது பெரும் ஆறுதலை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.