கூரையை பிய்த்து கொட்டிய அதிஸ்டம் : ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர் தலை சுற்ற வைக்கும் தொகை!!

40

அமெரிக்காவில் நபர் ஒருவருக்கு 2 டொலருக்கு வாங்கிய ‘பவர்போல்’ லொத்தரில் 1.8 பில்லியன் டொலர் ஜாக்பொட் அடித்துள்ளது.

கிருஸ்துமஸ் நாளில் குறித்த நபருக்கு (இலங்கை ரூபாய் மதிப்பில் சுமார் 55,728 கோடி ரூபாய்) அதிஸ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொண்டியுள்ளது.

அமெரிக்காவின் பிரபல ‘பவர்போல்’ லொத்தரின் நேற்றைய (டிசம்பர் 25) குலுக்கலில், ஆர்கன்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த அதிர்ஷ்டசாலி ஒருவர் 1.8 பில்லியன் டொலர் ஜாக்பொட் பரிசை தட்டிச் சென்றுள்ளார்.

வெறும் 2 டொலர் விலையுள்ள இந்த லொத்தர் சீட்டில், 4, 25, 31, 52, 59 ஆகிய எண்களும், சிவப்பு நிறத்தில் 19 என்ற எண்ணும் என மொத்தம் 6 எண்களும் சரியாகப் பொருந்தியுள்ளன.

அமெரிக்க லொத்தர் வரலாற்றில் தனிநபர் ஒருவர் வென்ற இரண்டாவது மிகப்பெரிய பரிசுத் தொகை இதுவாகும். 2022 ஆம் ஆண்டு வெல்லப்பட்ட 2.04 பில்லியன் டொலர் பரிசே இதுவரை உலக சாதனையுடன் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் வெற்றி பெற்ற நபர் தனது 1.8 பில்லியன் டொலர் பரிசைப் பெறுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன.

பெரும்பாலான வெற்றியாளர்கள் இந்த முறையையே தேர்வு செய்கின்றனர் (வரி பிடித்தங்கள் போக ஒரு குறிப்பிட்ட தொகை உடனடியாக வழங்கப்படும்).

அடுத்த 29 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையாக பிரித்துப் பெற்றுக் கொள்ளலாம். 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பவர்போல் லொத்தர் குலுக்கல் முறை, தற்போது அமெரிக்காவிலுள்ள 50 மாகாணங்களில் 45 மாகாணங்களில் செயல்பாட்டில் உள்ளதாக கூறப்படுகின்றது.