
தான் தவறான முடிவினை எடுத்துவிட்டதாக விபச்சார வழக்கில் சிக்கிய நடிகை ஸ்வேதா பாசு தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் இருக்கும் ஹொட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நடிகை ஸ்வேதா பாசுவை கையும் களவுமாக பிடித்து பொலிசார் பின்பு மறுவாழ்வு மையத்தில் தங்க வைத்துள்ளனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர் கூறியதாவது, தினசரி செலவிற்கே நான் திண்டாடியதால், சிலர் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி நான் விபச்சாரத்தில் தள்ளப்பட்டேன்.
நான் எனது சினிமா வாழ்க்கையில் தவறான முடிவுகள் எடுத்துவிட்டேன் என்பதை ஒப்புக் கொள்கிறேன். எனவே செய்த தவறுக்காக வருந்துவதை தவிர வேறு வழியில்லை என கூறியுள்ளார்.





