
கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்தவர் நிமோனியா காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார். கனடாவில் வசித்து வந்த 42 வயதான குறித்த நபர் அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார்.
குறித்த நபர் வட்டுக்கோட்டை பகுதியில் தங்கியிருந்த நிலையில் , கடந்த 31ஆம் திகதி காய்ச்சல் காரணமாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் , சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை(3) உயிரிழந்துள்ளார். கனடாவாழ் நபரின் உயிரிழப்புக்கு நிமோனியா காரணம் என வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.





