வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மாநாடு!!(படங்கள், காணொளி)

712

நேற்றிரவு வவுனியாவில் முடிவடைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் முக்கிய 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நேற்று (08.09) மாலை 4.15 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் நீதி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், அதன் ஊடகச் செயலர் பாஸ்கரா, ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், அதன் செயலாளர் சிவசக்தி ஆனந்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், அதன் மத்தியகுழு உறுப்பினர் வினோ,

புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன், அதன் மத்தியகுழு உறுப்பினர் சந்திரகுலசிங்கம், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், இந்திய தூதுவராலய அதிகாரி தட்சனாமூர்த்தி, நவசமாஜக் கட்சி உறுப்பினர் ஜயசிங்க, நல்லாட்சிக்கான மக்கள் இயக்க உறுப்பினர், மதத்தலைவர்கள், மற்றும் பல தலைவர்களும் பங்குகொண்டனர்.

கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராஜா எம்.பி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 15 தீர்மானங்கள் வெளியிடப்பட்டு உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள் உரைகள், கலை நிகழ்வுகள் என்பனவும் நடைபெற்றன.

-பண்டிதர்-

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19