
இலங்கையில் நேற்று (05) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 6000 ரூபாயால் அதிகரித்த நிலையில் இன்று (06) மீண்டும் 3000 ரூபாயால் அதிகரித்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (05) 24 கரட் தங்கம் பவுண் 362,000 ரூபாயாக விற்பனையாகியிருந்த நிலையில், இன்று (06) மீண்டும் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 365,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 337,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.





