
வவுனியா பூந்தோட்டம் வீதியில் நேற்று (10.01.2026) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் சிறுகாயமடைந்தனர்.
பூந்தோட்டம் பகுதியில் இருந்து நகர் நோக்கிசென்ற மோட்டார் சைக்கிள் அதே திசையில் சென்ற காருடன் பின்புறமாக மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இருவர் சிறுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்திருந்தனர்.





