முச்சக்கரவண்டி விபத்து – சாரதி படுகாயம்!!

380

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் முச்சக்கரவண்டியொன்று விபத்திற்கு உள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (13.01.2026) காலை இடம்பெற்றுள்ளது. வெதுப்பக உணவுகள் விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

முச்சக்கரவண்டியின் முன்சக்கரம் உடைந்து தடம் புரண்டதால், விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த சாரதி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.