இரு கால்களை இழந்த முன்னாள் போராளி இசைத்தட்டு வெளியீடு!!

311

முன்னாள் போராளியான நிமால் என்பவரின் “வலியின் வரிகள்” காணொளி இசைத்தட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி. சிவமோகன் ஆகியோரால் வெளியிடப்பட்டது.

நேற்று செல்வபுரத்தில் நடைபெற்ற வலி சுமந்த மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் இந்த இசைத்தட்டு வெளியிடப்பட்டது. காணொளி பேழையின் முதல் பிரதியை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பெற்றுக்கொண்டார்.

இரண்டு கால்களையும் இழந்த ஒருவரால் இந்த சாதனை முயற்சி இசைத்தட்டாக வடிவம் பெற்றமைக்கு நிகழ்வில் கலந்து கொண்ட பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். மேலும் நிமாலின் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றதால் இன்று செல்வபுரம் கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து மதிப்புரை வழங்கிய யோ.புரட்சி, நிமாலின் வலிகள் பற்றியும், இசைத்தட்டு தயாரிப்பாளர் நிமால் அடைந்த வேதனைகள் பற்றியும் விபரித்தார்.
11 12 13 14 15 16 17