
இந்தியாவின் ஆக்ராவில் மனிதவள மேலாளராக பணியாற்றிவந்த இளம்பெண்ணொருவர் அலுவலகம் சென்ற நிலையில் மாயமானார். பொலிசாரின் தேடுதல் வேட்டையில் அதிரவைக்கும் உண்மைகள் தெரியவந்துள்ளன!
ஆக்ராவிலுள்ள அலுவலகம் ஒன்றில் மனிதவள மேலாளராக பணியாற்றிவந்த மிங்கி ஷர்மா (32) என்னும் இளம்பெண், கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, ஜனவரி மாதம் 23ஆம் திகதி அலுவலகம் சென்ற நிலையில் மாயமானார்.
மகளைக் காணாத பெற்றோர் பொலிசில் புகாரளிக்க, மறுநாள், அதாவது 24ஆம் திகதி யமுனா நதியின் மீது அமைந்துள்ள ஜவஹர் பாலத்தின்மீது சந்தேகத்துக்குரிய வகையில் பை ஒன்று கிடப்பதைக் கண்ட மக்கள் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.
பொலிசார் அந்தப் பையை பரிசோதிக்கும்போது, அதற்குள் ஆடையில்லாத ஒரு பெண்ணின் உடல் மட்டும் இருந்துள்ளது, அதன் தலையைக் காணவில்லை.

இரண்டு வழக்குகளையும் இணைத்து பொலிசார் CCTV கமெராக்களை ஆராயும்போது, மிங்கியின் அலுவலகத்திலிருந்து ஒருவர், ஒரு பெரிய பையை இழுத்துக்கொண்டு வந்து ஒரு ஸ்கூட்டரில் ஏற்றிச் செல்வது தெரியவந்தது.
அடுத்தடுத்த கமெராக்களை ஆராய்ந்ததில், அந்த நபர், மிங்கி வேலை செய்யும் அதே அலுவலகத்தில் வேலை செய்யும் வினய் சிங் (30) என்பவர் என்பது தெரியவரவே, பொலிசார் அவரைக் கைது செய்துள்ளார்கள்.
விசாரணையில், தானும் மிங்கியும் இரண்டு ஆண்டுகளாக காதலித்துவந்ததாகவும், ஆனால், ஆறு மாதங்களுக்கு முன் மிங்கி வேறொரு ஆணுடன் பழகத் துவங்கியது தெரியவந்ததாகவும் கூறியுள்ளார் வினய்.
மிங்கியை அலுவலகத்து வரவழைத்த வினய், தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்த, மிங்கி மறுத்துள்ளார். வாக்குவாதம் முற்றவே, மிங்கியைக் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார் வினய்.
பின்னர் அவரது தலையை தனியாக வெட்டி ஒரு பையிலும், உடலை மற்றொரு பையிலும் போட்டு, யமுனா நதியில் வீசிவிட திட்டமிட்டுள்ளார் வினய்.
ஆனால், ஜவஹர் பாலத்திற்குச் சென்றபோது அங்கு ஆள் நடமாட்டம் இருந்துகொண்டே இருந்ததாலும், உடல் இருந்த பையைத் தூக்கமுடியாததாலும், பாலத்தின் அருகிலேயே அந்த பையை வைத்துவிட்டு, மிங்கியின் தலை இருந்த பையை வேறொரு இடத்தில் கொண்டு போட்டுள்ளார் வினய்.
அவர் கொடுத்த தகவலின்பேரில் மிங்கியின் தலையும், அவரது மொபைல் மற்றும் ஸ்கூட்டரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள வினயிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.





