விபச்சார வழக்கில் நடிகை ஸ்வேதா கைது : கொந்தளித்த குஷ்பு!!

513

Kushbooநடிகை குஷ்பு, பாலியல் தொழில் வழக்கில் கைதான நடிகை விவகாரம் பற்றி தனது ட்விட்டர் வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்பு எப்போதும் சமூகத்தில் நடக்கும் விடயங்கள் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவிப்பதை வழக்கமாக கொண்டவர். இந்நிலையில், தற்போது அவர் பாலியல் வழக்கில் கைதான நடிகை ஸ்வேதா பாசுவிற்கு ஆதரவளிக்கும் வகையில் 3 கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

* முதல் பதிவில், பாலியல் தொழில் வழக்கில் ஒரு பெண் கைது செய்யப்படும்போது அவரது முகம், அடையாளம் வெளிச்சம் போட்டு காட்டப்படுகிறது.

ஆனால், அந்த பெண்ணுடன் இருந்த ஆணின் அடையாளம் ஏன் மறைக்கப்படுகிறது, அந்த ஆணுக்கும் இந்த குற்றத்தில் சமபங்கு இருக்கிறதுதானே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

* இரண்டாவது பதிவில், பாலியல் தொழில் தண்டனைக்குரிய குற்றம் என்றால், அந்தக் குற்றத்தில் சம்பந்தப்படும் ஆண்களையும் அதே சட்டத்தின் கீழ் கைது செய்யுங்கள்.

ஒரு பாலியல் தொழிலாளியின் சேவை பெற்றதற்காக அந்த ஆண்மகனுக்கும் அதே இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐ.பி.சி) கீழ் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

*மூன்றாவது பதிவில், ஒருவகையில் அந்த ஆணுக்கு கூடுதல் தண்டனைகூட வழங்கலாம். ஏனெனில், ஒரு பெண்ணின் பொருளாதார இயலாமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அதிலிருந்து பாலின்பம் பெறுகிறார் அவர் என்று தெரிவித்துள்ளார்.