வவுனியா நெளுக்குளத்தில் சுற்றுச்சூழல் தூய்மை எனும் தொனியில் சிரமதானம் முன்னெடுப்பு!!

76

சுற்றுச்சூழல் தூய்மை , ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் சமூக ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் பொது இடங்களை அழகுபடுத்துவோம் எனும் நெளுக்குளம் கிராம அலுவலர் திருமதி லெ.கௌசல்யாவின் எண்ணக்கருவில் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.

இதன் முதற்கட்டமாக இன்று (03.02.2025) காலை வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் அலுவலக வளாகம் , கிராம அபிவிருத்தி சங்க வளாகம் என்பற்றினை அழகுபடுத்தும் செயற்பாடு இடம்பெற்றது.

இச் செயற்பாட்டில் கிராம மக்கள் , அமைப்புக்களின் பிரதிநிதிகள், இளைஞர் மற்றும் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.