நாய் குரைத்ததால் நின்ற திருமணம் : காதலனை வேண்டாமென கூறிய காதலி!!

22

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் நாய் குரைத்ததால் வெடித்த பிரச்சனையால் காதல் திருமணம் நின்றது பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தர பிரதேச மாநிலம் காகா கோட்வாலி பகுதியில் சுமித் கேஷர்வானி என்ற நபருக்கும், அவரது காதலிக்கும் திருமணம் நடைபெற இருந்தது.

இருவரின் குடும்பத்தினரின் சம்மதத்துடன் இந்த திருமணம் முடிவு செய்யப்பட்டது. மணமகள் சார்பில் அவரது உறவினர்கள் பலர் வாகனங்களில் வந்திருந்தனர்.

திருமணத்திற்கான அனைத்து சடங்குகளும் நடக்க, மணமேடைக்கு அருகே மணப்பெண்ணின் வளர்ப்பு நாய் குரைக்கத் தொடங்கியது. இதனால் கோபமுற்ற சுமித் தரப்பு இளைஞர் ஒருவர் அந்நாயை அடித்துள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மணமகள் வீட்டார் சத்தம்போட, இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் பலர் காயமடைந்த நிலையில் தகவல் அறிந்து வந்த பொலிஸார் அவர்களை அமைதிப்படுத்தினர்.

பின்னர் நடந்த விசாரணையில் மணமகள் சுமத்தை திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை என்று கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து திருமணம் நிறுத்தப்பட, இருதரப்பில் இருந்தும் பரிசுகள் மற்றும் பணப்பரிமாற்றங்கள் திருப்பித் தரப்பட்டன.