வெளிநாட்டில் பதுங்கியிருந்து இலங்கை திரும்பியவர் அதிரடியாக கைது!!

34

மாத்தறை, வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த முன்னாள் பொலிஸ் ஆய்வாளர் ஜகத் நிஷாந்த கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் பின்னர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நிலையில் நேற்று மீண்டும் நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்டார். 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியன்று நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோன் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.